உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+,

இப்படிச் சொல்லியங்கு இருக்கின்ருன் சேப்பிளையான் செப்பமுடன் காத்தவனுர் தேவியிடம் ஈதுரைப்பார் வாருமடி பெண்ணே ஒருவசனம் உரைக்கின்றேன் பார்தனில் உன்னைப் பரிந்து சிறையெடுக்க வேதியர்கள் அங்கு வெகுண்டு போய் ராசனிடம் சேதி உரைத்திடவே சிறந்து' எனப்பிடிக்க என்தகப்பன் சேப்பிளையான் சீமையெங்கும் தேடுகிருன் அன்புடனே நானும் அவன்கையில் அகப்பட்டு

கண்டு ராசனேயும் கழுவேறித் திரும்பி உனையழைக்க வருமளவும் கன்னியே பாரதனில்

உண்டு இருமென்று உரைக்கின்ருர் காத்தவனர்

காத்தான் சொல் விருத்தம்

அன்புடைய மங்கையரே சொல்லக் கேளாய் அவருடைய கையிலே யான்சிக் சிடினும்

இன்பமுடன் ராசனையும் கண்டு யானும்

பகுங்கழுவில் ஏறிய பின்னுனே அழைக்க

அன்புடனே வந்திடுவேன் அதுவரைக்கு ம்ே

அசையாமல் இருமெனவே வெளியி ல் வந்து

பண்புடனே பாச்சூர் சென்று காத்தான்

பாங்குமதி குடிக்க பயனேச் சொல்வேனே

காத்தான் மதுகுடி விருத்தம்

ராசருட சேவகர்கள் கவிந்ததையும்

பூவாயி நல்ல தென்று

நேசமுடன் சரக்குவகை நிறையச் சேர்த்து

மதுவடிய கிறையக் கட்டி

ஆசையுடன் வைத்திருக்க காத்தவனர்

மதுவருந்தி அவள்தன் வீட்டில்

வாசமுள்ள பூவாயி மதுவுண்டு

மலரணையில் மயங்கினரே