29
மதுரையிலே யுனக்கு மகன்பிறக்க என்னுடைய
மாணிக்கச் சிவகங்கை சர்க்கரை வழங்க எதிராதே. நெஞ்சு துணிந்து கானு
என்னுடைய திருப்புவனங் கேழ்ப்பையோ வென்று எழுதியே காயிதந் தன்னில் அப்போ
இயல்பான சேவகர் கையில் கொடுத்தனுப்ப
பதில் கடிதம் மதுரைக்கு வந்தது மதுரை கான்சாயபு கையில் கொடுத்தார் அந்த
மதயானை கான்சாயபு வாசித்துப் பார்த்து
கான்சாகிபு மறுபடியும் எழுதிய கடிதம்
மதிமந்திரி தாண்டவ ராயா கானு
மதயானை யொருவயணஞ் சொல்லுகிறேன் கேளு வேலூரு விசலூரியி லிருந்து நானும்
வீறாக மதுரைக்கு வந்ததின் பிறகு எனைக்கண்டு வணங்காத பேரை தீயா
யெரித்து நிர்துளிப் படலமாய் நொறுக்கி மனையூரு மாங்காய் பிடுங்கி நானும்
பத்துநிலை வழிப்பாதை மடிமாங்காய் போட்டு ஒரு மாங்கா யதிலே குறைந்தாக்கால் பாதர்
ஒன்பதுகாய் வட்டி வாங்கினேன் சிங்கம் தருவோங்குஞ் சிக்கந்தர் மலையில் பாதை தன்னில்வெகு திரவியத்தை முடிந்து நானெறிந்தேன் ஏழுநா ளப்படித் தானே அதிலே
நலியாது கருங்குருவி நாடாது பணத்தில் அப்படி யடித்தேன் துரைதானு : எனக்கு
ஆரடா பனங்காட்டும் மறவனோ யெதிரி என்று சொல்லி கான்சாயபு நீலன் நன்றாய் எழுதியே காயிதத்தைத் திருப்புவனம் அனுப்ப வந்த தொரு காயிதந் தன்னை நல்ல
வரிசைபெறு வேளாளன் பாத்தேது சொல்வான்
தளவாயின் இரண்டாவது பதில் கடிதம்
அடாயிப்படி சொன்னியே கானு நல்ல தாகட்டுமொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு குடிக்கிறது பனங்காட்டுக் கள்ளு மறவர்
எடுக்கிற துடல்கட்டு மொக்குவளை தடிதான்