39
கானனுக்கு முத்தாலே அங்கி வச்சிரக்
கல்லிழைத்த மோதிரமுங் கணக்கவே செய்து முளகு சம்பா நெல்லரிசி தனிலே நல்ல
மூவைந்து பதினைந்து பொறியது யிடித்து அழகு சீரகச்சம்பா நெல்லில் - அப்போ
ஆரேழு மரக்காலை யவ்லிடிக்கச் சொல்லி சரியாகச் சர்க்கரை கலந்து நல்ல
தளமான யாழ்ப்பாண பட்டு மெடுத்து இருநூறு பொன்பெற்ற பட்டு 参姆 இழை யிழைக்குச் சரிகையினால் குச்சுகள் கட்டி பாற்பகவு பாலாடு நடத்தி நல்ல
பண்பான செங்கரும்பு கண்டு பனிரெண்டு சேல் போலும் விழிமாசா மகிழ மதுரை
திசை நோக்கி யனுப்பினான் தாண்டவ ராயன்
பரிசுகள் வருவதைக் கான்சாகிபு அறிந்தது
வருகுது மறவரிட வரிசை என்று
மதுரைதுரை கான்சாயபு காதினாற் கேட்டு தெருவீதி மேடை நடந்து கானு
திருமலை கர்த்தாக்கள் சாவடியுந்தாண்டி சித்திரக் கற்கூடமுந் தாண்டி கானு
தேவடிவிட் டரண்மனைச் சாவடியுந் தாண்டி கர்த்தாக்க எமர்ந்திருக்கு மேடை அந்தக்
கருங்கல்லுச் சவுக்கையி லொயிலாகச் சாய்த்து நரசிம்ம நாய்க்கனை யழைத்து நல்ல நரசப்பன் குருவப்பனை வரவழைக்கச் சொல்லி திறமிகு கான்சாயபு நீலன் அந்த
சீனிச்சிராவ்" முரசு வெள்ளைக் காரனை யழைத்து படேபடே சாய்பையு மழைத்து மல்லி
நாய்க்கன் சேகரியை வரவழைக்கச் சொல்லி தடமதனன் முத்தழகு பிள்ளை நல்ல
சண்முக வேலாயுத முதலியையு மழைத்து தானப்ப நாய்க்கனை யழைத்து நல்ல
தளவாய் முதலி தன்னை வரவழைக்கச் சொல்லி
45. சீனிச்சி ராவ் - சீனிவாசரால், உயர்தர அதிகாரி. முரசு வெள்ளைக் காரன்மார்ச்சஞ்த் என்ற பிரெஞ்சுக்காரன்-பீரங்கி செய்தற்காக அழைத்து வரப்பட்டவன். வேறு பெயர்கள் கற்பனைப் பெயர்களாகத் தோன்றுகின்றன. அவை வரலாற்றுச்
சான்றுகளில் காணப்படவில்லை.