இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 19
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
பாணன் சூடான்! பாடினி அணியாள்
- * * * * * * * * * * * * * * i. | | | | | | | || || || || || ||
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே.
-புறநானூறு: 242
இதுகாறும் புறவாழ்வில் பழந்தமிழர் காட்டிய பண் பாட்டு விளக்கத்தினைக் கண்டோம். இனி, அகவாழ்வில் அவர்தம் மனப்பண்பாடு எவ்வாறு தூய்மையும் செம்மை யும் கொண்டிலங்கியது என்பதனைக் காண்போம்.
மனைவாழ்விற்கு விளக்கமாய்த் திகழ்பவள் மனைவியே, * ssD வாழ்விற்கு ஆடவன் பொருத்தமானவனாய் விளங்கினன். . . "
மனைக்குவிளக் காகிய வாணுதல் கணவன் முனைக்குவரம் பாகிய வென்வேல் கெடுந்த கை.
-புறநானூறு 314: 1-2
இத்தகைய வாழ்வுப் போக்கில் ஆடவனுக்கு அவன் மேறகொண்ட கடமையே-வினையே உயிராகவும், மனை வாழ்வு வாழும் மகளிர்க்கு அவர்தம் கணவரே உயிராக வும் துலங்கினர்.
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
- -குறுந்தொகை: 125: 1-2
காதல் நிலையிலே தலைவியர் பண்பு நலம் பாராட்டப் படுவதாயுளது. ஒரு நாள் தலைவி தன் தோழியரோடு சென்று நெய்தலங்கானலின் வெண்மணலில் விளையாடி னாள். அப்பொது அவ் வெள்ளிய மனலில் புன்னைவிதை