இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னொரு காலத்திலே
செந்தமிழ் நாட்டினிலே
மூன்றுமன்னர் ஆண்டுவந்தார்
முறையாக ஆண்டுவந்தார்.
வரும்படியில் ஆறிலொன்று
வரியாகப் பெற்றுக் கொண்டு
தருமநீதி தழைத்தோங்கத்
தக்கபடி ஆண்டு வந்தார்.
வீரத்துடன் போர்புரியும்
வேங்கைகளாம் தமிழரசர்
சேர சோழ பாண்டியராம்
திருநிலத்தை ஆண்டவராம்.
பாண்டியர்க்கு மீன் கொடியாம்
பாயும் புலி சோழருக்காம்
ஆண்டிருந்த சேரருக்கோ
அழகான விற் கொடியாம்!
4
25