இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதற்குப் பின்னர் ஐம்ப தாண்டு
ஆன பிறகு நாட்டினில்
ஆங்கி லேயர் தமைஎ திர்க்க
அனைவரும்கி ளம்பினர்.
இதற்குப் பெயரே சுதந்தி ரப்போர்
என்று கூறி வருகிறோம்.
இது கடந்து நூறு வருடம்
[1]இன்று முடிவு பெற்றதாம்.
இந்தப் போரின் கார ணங்கள்
யாவை என்று நானுமே
எடுத்துக் கூற விரும்பு கின்றேன்.
இருந்து கொஞ்சம் கேளுங்கள் !
“இந்தி யாவில் நூறு வருடம்
எங்கள் ஆட்சி நிலைத்ததே!”
என்று வெள்ளைக் காரர் உலகில்
அன்று காட்ட விரும்பினர்.
- ↑ 15–8–1957