இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிறந்த முறையில் விழா நடத்தத்
திட்டம் போட்டு வந்தனர்.
தேச மக்கள் இதைய றிந்து
சீற்றம் கொள்ள லாயினர்.
பிறந்த நாட்டில் மக்கள் வாடப்
பெருமை கொள்ளும் இவர்களைத்
துரத்தி அடிக்க வேண்டு மென்று
துணிந்து முடிவு கட்டினர்.
மகன் இல்லாமல் அரசர் யாரும்
மடிய நேர்ந்தால் அவரது
வார்சு நாங்கள்' என்றுகூறி
வம்பு செய்தார் வெள்ளையர்.
சுகம் இழந்து, சொத்தி ழந்து
சுதந்திரத்தை இழந்ததால்,
துடிதுடித்து மன்னர் சிலரும்
துணிச்சலாய்எ திர்த்தனர்.