பக்கம்:தமிழ் இனம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள்

41

றது என்பதை எண்ணிப் பாருங்கள். தலையிலிருந்து விழும் மயிர் நம் கண்களுக்கு அற்பமாகத் தோன்றி னும், உலகத்திற்குச் சிறந்த உண்மையை உணர்த்துகின்றது என்பதைத் தம் நுண்ணறிவால் கண்ட வள்ளுவர்தம் பேரறிவினை என்னென்பது!

முடிவுரை

இங்ஙனம் பல குறட்பாக்கள் நமது வாழ்க்கையைச் செப்பம் செய்யத்தக்க ஆற்றல் பெற்று விளங்குகின்றன. ஆதலின், வாழ்க்கைப் பெரு நூலாக விளங்குகின்ற இத்திருக்குறளை நாள்தோறும் படித்துத் தம் வாழ்க்கையைச் செந்நெறிப் படுத்துதல் தமிழ் மக்கள் கடமையாகும். இம் மாபெரும் புலவர் பெருமானைப் பெற்றெடுத்த தமிழன்னைக்கு நமது வணக்கம் உரியதாகுக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/38&oldid=1359414" இலிருந்து மீள்விக்கப்பட்டது