இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௳
குருபாதம்
திருக்கயிலாய பரம்பரை
தருமையாதீனம் இருபத்தாறாம் பட்டத்தில்
எழுந்தருளியிருக்கும் குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய
சுவாமிகள் அருளிய
வா ழ் த் து ரை
- ஞாலம் நின் புகழே மிகவே ண் டும் தென்
- ஆலவாயில் உறையும் எம்ஆதியே:
‘சைவ சமயம்’ எனப்படுகின்ற சிவநெறியின் சிறப்பை மக்கள் எளிதில் உணரச் செய்வன பன்னிரு திருமுறைகளாகும். இவைகளை இறைவனே உலகிற்கு அருளினான் என்பது, இவற்றின் ஆசிரியர்களது வரலாற்றால் நன்கு அறியப்படும் .
பன்னிரு திருமுறைகளில் முதற்கண் உள்ள எட்டினை அருளிச் செய்தவர்கள் சமயாசாரியர் நால்வருமாவர். அவருள் திருஞானசம்பந்தர் நம்மைப்போல வினை காரணமாக இவ்வுலகில் வந்து பிறவாது, இறைவனது திருவருளாலே விடுக்கப் பெற்றுத் திருவவதாரம் செய்தமையை ‘திருந்தடி-மறக்குமா றிலாத என்னை மையல் செய்து மண்ணின்மேல் - பிறக்குமாறு காட்டினாய்’ என்று அவரே அருளிச் செய்தமையால் விளங்குகின்றது .