௨
பதிப்புரை
சிவநெறியும் செந்தமிழும் வளர இயலும் பணிகளைச் செய்யும் பேரார்வமுடைய நண்பர்கள் திரு பு. ர. சுவாமி நாதன், M.A., M.T., அவர்களும், ஒரத்துார் நிலக்கிழார் வித்துவான் திரு சு. குஞ்சிதபாதம் பிள்ளை அவர்களும் திருவருட்பயன் நிரம்ப அழகிய தேசிகர் உரையுடன் கூடிய இவ்வுரை விளக்கத்தினைச் சைவசித்தாந்த மகாசமாசத்தின் மணிவிழா மலராகத் தமது பொருட்செலவில் வெளியிட்டுதவினார்கள். இந்நூலின் படிகள் முற்றும் செலவாகிய நிலையில் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளியிடப் பெறுகின்றது. இதனை நிறைவேற்றிக் கொடுத்தருளிய திருவருளை நெஞ்சார நினைந்து போற்றுகின்றேன்.
இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிடுதற்கு அன்பு கூர்ந்து இசைவளித்த திரு பு. ர. சுவாமிநாத முதலியார், திரு சு. குஞ்சிதபாதம் பிள்ளை ஆகிய நண்பர்கள் இருவருக்கும் எனது உளமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூலினை வனப்புற அச்சிட்டுதவிய அண்ணாமலைநகர் சிவகாமியச்சக உரிமையாளர் டாக்டர் கோ. ராஜசுந்தரம் எம்.ஏ., எம்.லிட்., பி எச்.டி. அவர்கட்கு எனது பாராட்டும் நன்றியும் என்றும் உரியவாகும்.
இந்நூலினை வாங்கிப் பயன்கொள்ளுமுகமாக இத்தகைய தமிழ்ப்பணிக்குத் தமிழன்பர்கள் மேலும் மேலும் ஆக்கமும் ஊக்கமும் நல்குவார்கள் என உறுதியாக நம்புகின்றேன்.
142,கனகசபை நகர் இங்ஙனம்
சிதம்பரம்.
7–9–76 க. வெள்ளைவாரணன்