இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஓம்
நற்றிணை தெளிவுரை
கடவுள் வாழ்த்து
பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.
அனைத்துக்கும் ஆதியான பரம்பொருளின், எண்ணற்ற தோற்றங்களுள்ளே ஒன்றையேனும் உறுதியாக மனங்கொண்டு போற்றி, வாழ்வுக்கு வகைகாண முயல்வது சான்றோர் மேற் கொண்ட மரபாகும். அம் மரபினைப் பின்பற்றியே, இத் தொகை நூலிற்கான கடவுள் வாழ்த்தையும் செய்துள்ளனர் ஆசிரியர் பெருந்தேவனார் அவர்கள். இது, திருமாலைப் போற்றும் செய்யுள். காத்தற்கடவுளான அவனை நினைந்து போற்றுதல், இத் தொகைக்கு அவனே என்றும் காப்பாளனா வான் என்று நிறுத்துவதாகவும் அமையும்.
'மாநிலம் சேவடியாக, தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக, விசும்பு மெய் யாக, திசை கையாக, பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக, இயன்ற வெல்லாம் பயின்றுஅகத் தடக்கிய வேத முதல்வன், என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே!
5'