இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறிவும் வளர்ந்தது. ஆதலால் அது அழாமல் கடவுளையே நினைத்துக்கொண்டு இருந்தது.
தகப்பனார் பூஜை முடித்துக் கொண்டு குழந்தையின் அருகே வந்தார். அப்போது, அந்தக் குழந்தையின் வாயில் பால் வடிந்து இருந்தது. கடவுள் வந்த விஷயம் தகப்பனாருக்குத் தெரியாது அல்லவா? அக் குழந்தை எவர் இடத்திலோ பால் குடித்துவிட்டது என்று தகப்பனார் எண்ணினார்.
ஆதலால், அவருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. அவர், அருகே இருந்த ஒரு சிறு கொம்பினை எடுத்துக் கொண்டு, “உனக்குப் பால் கொடுத்தது
8