இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பட்டார்கள். அக் குழந்தை நாளுக்கு நாள் அழகாக வளர்ந்து வந்தது.
சில நாட்களில் அக் குழந்தை தவழ ஆரம்பித்தது. பிறகு, அது மெதுவாக நடக்கவும் கற்றுக்கொண்டது.
அந்தக் குழந்தை மிகவும் புத்திசாலி. மற்றக் குழந்தைகளைப் போல் அது ஒருவருக்கும். தொந்தரவு கொடுத்ததில்லை; வீணாக அழுததும் இல்லை. அந்தக் குழந்தைக்குக் கடவுளின்மீது மிகவும் ஆசை. ஆதலால் அது சுவாமியின் பெயரைச் சொன்னால் கும்பிடும்.
அது, அச் சிறுவயதிலேயே பெரியோர்களிடம் மரியாதையாய் நடக்கும். ஆதலால், அவ்வூரில் உள்ள எல்லோருக்கும் அக் குழந்தைமீது ஆசை.