உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'செவ்வானம் புகழ் கணேசலிங்கன் போன்ற இலங்கை எழுத்தாளர்கள் எழுதுவதைப் போல ஒரு புதிய முயற்சி தமிழில் இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. தாமரை போன்ற பொதுவுடைமை இயக்க ஏடுகளில் கருத்துக்கள் மட்டும் இருக்கின்றன. கணையாழி போன்ற புதுமை இலக்கிய ஏடுகளில் கலையம்சம் இருக்கிறது. இந்த இருவருக்கும் அப்பால் ஒழுங்காகத் தமிழும் ஆங்கிலமும் படித்து நேரடியாகவே இந்தச் சமூக மனிதனின் மன அவஸ்தைகளைக் கண்டு வெந்து பேணு பிடித்தவர்கள் கவிதைத் துறையில் முழு வெற்றி பெற்றுவிட்டார்கள். நாவல் துறையில் அந்த முயற்சியை எழுத்தாளர் ராசீ மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். தெளிவான சமூக விஞ்ஞானப் பார்வை அவருடைய திசை வழியைக் கம்பீர மாக நமக்கு அறிமுகப் படுத்துகிறது. சுரண்டப்படுகிறவன் யார்? சுரண்டுகிறவன் யார் என்பதை வைத்தே சமூகத்தில் 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/24&oldid=786047" இலிருந்து மீள்விக்கப்பட்டது