உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

19


. கற்பழிக்கப்படுகிறதும் எத்துணை பெரிய கொடுமை என்கிறதை நிதர்சனமாய் என்னாலே காணமுடிஞ்சது!...." - "நல்ல வேளை, நான் பயந்துவிட்டேன், சற்று நேரத்துக்குள்ளே!... வாஸ்தவமாகவே, எனக்கு அந்தக் கட்டத்தில் நடிக்கவே மனசில்லே! கலையார்வத்தினாலேதான், ஊர்வசியைக் கற்பழிக்கும் பாகத்தை ஏற்க வேண்டியிருந்துச்சு!" பூமிநாதனின் கண்கடையில் ஈரம் இருந்தது. "நல்ல உள்ளம் படைச்ச உங்களுக்கு ஒரு சோதனை போலத்தான் அந்த நிகழ்ச்சி அந்த நடிப்பு அமைந்திருந்துச்சு!.... கலையம்சத்தைப் பொறுத்த மட்டிலே, உங்களுக்கு அந்நடிப்பு ஒரு வெற்றியாகவே அமைந்திடுச்சுங்க, மிஸ்டர் பூமிநாதன்!" என்று நிறுத்தினான் அம்பலத்தரசன். பூமிநாதன் பேசிய பேச்சுக்கு இயந்திர ரீதியாகப் பதில் சொன்னானே தவிர, அவன் மனத்தில் சற்று முன்னம் தன் அறையில் நிகழ்ந்த அந்த அடைக்கலக்காதை"யின் நினைவும் நிழலும் தான் பிரதானமாக இருந்து வந்தன. ஏதேதோ சிந்தனையின் சிதறல்கள் அவனது உள் மனத்தை ஆட்டிப் படைக்கத் தொடங்கி நிமிஷங்கள் பல கடந்துவிட்ட உண்மையை,அவன் அறிந்திராதவனா, என்ன? அந்தக் கட்டத்தில், உலக உருண்டை எவ்வளவு அந்தரங்கமாகச் சுழல்கிறது....! மேல் விட்டத்தில் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியின் சன்னமான ஒரு வகைச் சத்தத்தைக் கடந்து, "மிஸ்டர் அம்பலத்தரசன்!" என்ற குரல் கேட்கவே, அம்பலத்தரசன் திரும்பினான்; அழைத்த ஆசிரியரின் பக்கமாக நிமிர்ந்தான். "உங்க ரெவ்யூ ரொம்பவும் க்ளாஸாக இருக்குதுங்க!" “ரொம்ப நன்றிங்க எடிட்டர் ஸார்!.... நாடகமும் க்ளாஸாக இருந்திச்சு... என் விமர்சனமும் அதை யொட்டி அமைந்திடுச்சுங்க" என்று வழக்கம்போலவே தன்னடக்கமாகக் கூறினான் அம்பலத்தரசன். "மிஸ்டர் அம்பலத்தரசனுக்கு இயல்பாகவே இளகிய மனசு:கல் மனத்தையும் கரைக்கச் செய்யக்கூடிய நாடகக் கதை