உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

43


. மணி ஆறு நாற்பது! "நல்லதுங்க!" அறைக்கதவுகளையும் மாடிவழிக் கதவையும் பூட்டிக் கொண்டு அவன் இறங்கினான். அதற்குள் படிதாண்டிக் கீழ்த்தள முகப்பை அடைந்து விட்டாள் ஊர்வசி. பொருட்காட்சிசாலைப் பொருளைப் பார்ப்பது போல, பலப்பல கண்கள் ஊர்வசியை மொய்த்திருந்தன. அம்பலத்தரசன் படிகளைத் தாண்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அவன் அறையிலிருந்த டெலிஃபோன் கண கண'வென்று ஒலிக்கத் தலைப்பட்டது! அவ்வுண்மையை அவன் அறியான்! "வா, போகலாம். அதோ, டாக்ஸி!..."