பச்சைக் கனவு O 13
கும் ஒரே சமயத்தில் ஏன் சாவு சித்திக்கவில்லை? அச்சாவே புதுப் பிறப்பாகியிருக்கும். அல்லது இரவிலோ பகலிலோ குறைவிலாது நடமாடும் பூச்சி பொட்டுக்கள் ஏன் பிடுங்கிக் கொல்லவில்லை? அல்லது துர்த்தேவதைகள், வாயிலும் மூக்கிலும் செவியிலும் ரத்தம் குபுகுபுக்க அறைந்து ஏன் எங்கள் உயிர் குடிக்கவில்லை?
விதி! விதி!! விதி!!!
இதெல்லாம் நிஜமாக நடந்திருக்க முடியுமா? ஒரு ஒரு சமயம் என்னையே கேட்டுக் கொள்கிறேன்.
நடக்கிறதே, என்ன சொல்கிறாய்? என்று அவள் உருவம் என் மனதில் பச்சையாய் எழுந்து அவள் ஊமை வாய் என்னைக் கேட்கிறது.
குளக்கரையில் பசும் புற்றரையில் நாள் தவறாது. உட்காந்து உட்காந்து என்னுள் ஊறிய பச்சைத்தாபமே என்னையுமறியாது மாறிமாறித் தோன்றும் குருட்டுக் கனவாயிருந்தாலோ? 'ஒஹோ, நீ கண்டது குருட்டுக் கனவானால் நான் கண்டது ஊமைக் கனவா?' என அவள் உரு, என் காணாத கண்கள் காண, பேசாத வாயால் என்னைக் கேட்கிறது. எல்லாமே கணவாயின் பின் நேர்ந்தனவும் கனவா?
பின் நேர்ந்த நனவின் முந்தைய இரவு இப்பொழுது என் முன் எழுகிறது. சித்திரையின் சந்திரிகையாம்ரொம்ப உசத்தியாமே? அப்படித்தானா?
நிலவின் ஒளி கூட கண்ணு உறுத்துமோ? ஏனெனில் என் கைமேல் இரண்டு சொட்டுக்கள் கண்ணிர் உதிர்ந்தன. என் கைகள் அவள் கண்களைத் தேடின. அவள் என் கைகளைப் பற்றித் தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள். அவள் பச்சை வயிறு ஏன் கொதித்ததோ? என் மேல் சாய்ந்திருந்த அவளுடல் விம்மிக் குலுங்கிற்று. அவளைவிட நான் துர்பாக்கியசாலியா? என்னை விட அவளா? யார் அறிவார்? ஏனோ?