இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாரை மழைபொழிந்தாள்;
தன்மார்பில் அச்செடியை
ஆரத் தழுவி
அணைத்துத் துடித்தழுதாள்; தீச்சுடர் போலத் தளிர்துக் குருதியைப்போல் பூச்செடி மேனியெங்கும் பூத்துக் குலுங்கியது.
ஆணிவே ரைக்கறையான்
அரிக்கக் கொடியொன்று மேனி வதங்கியே மெல்லவுயிர் சோர்வதுபோல் நாளாக நாளாகக் கோதை ஒளியிழந்தாள்; வேளை தொறும் உண்ண விருப்பமவள் கொள்வதில்லை.
பின்னி முடிக்காமல்
பேச்சுத்தேன் சொட்டாமல் கண்ணுக்கு மையெழுதிக் காட்டாமல், எப்போதும்
தொட்டிக் கருகிலே
தூங்குவதைப் பெற்றெடுத்த எட்டிக்காய்த் தந்தை எரிவிழியால் பார்த்துவிட்டான்.
______________________________ கண்ணீர்த்தவம் 31 ______________________________