இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
விடுதலை பெற்ற
சிட்டுக்குருவிகள்
இராயபுரம் மாதா கோயில் பக்கத்தில் சாலையோரத்தில் ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கிறது.
அந்த வேப்பமரத்தின் அடியில் ஒரு கிழவன் உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு எதிரில் ஒரு சிறிய பாய் விரித்திருக்கிறது. அந்தப் பாயின் மீது சில அட்டைகள் வரிசை வரிசையாகச் சரிந்து கிடக்கின்றன. அந்த அட்டைகளுக்கு எதிரில் ஒரு மரக் கூண்டு இருக்கிறது. மரக் கூண்டுக்குள் ஒரு சிட்டுக் குருவியிருக்கிறது.
மரக் கூண்டுக்கு ஒரு கதவு. அந்தக் கதவைத் தூக்கினால் சிட்டுக்குருவி வெளியே வரும்.