இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெருமை பேசிய பனிக்கட்டி
ஒரு நாள் காற்று வலுவாக வீசியது. பல மரங்கள் சாய்ந்து விட்டன.ஊரெங்கும் ஒரே புழுதியாக இருந்தது. கொடிமரங்கள் அறுந்து போயின. மக்கள், பறவைகள், விலங்குகள் யாவும் வெளியில் நடமாட முடியாமல் தவித்தன.
காற்று நிமிர்ந்து பார்த்தது. "உலகத்தில் நான் தான் பெரியவன். எல்லாரும் எனக்குப் பணிந்து நடக்கவேண்டும்” என்று கூவியது.
ஆ! ஆ! ஆ!
திடீரென்று ஒரு சிரிப்பொலி கேட்டது.
"யார் சிரிப்பது?" என்று காற்று சினத்துடன் கேட்டது.