R. corr. ஒடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஒரு கொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப் பா!ே என்றும், சாமிமத பேதங்கள் மூடவழக் கங்கள் தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை ஊதையினால் துரும்புபோல் அலக்கழிப்போம் பின்னர் ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம் வான்று குறிப்பிட்டுள்ளார். வானொலி வழி உரைத்த கருத்து வருமாறு : தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்! பைந்த மிழ்த்தேர்ப் பாகன்; அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்; இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவியரசு டுேதுயில் நீக்கப் பாடிவந்த நிலா காடு கமழும் கற்பூரச் சொற்கோ கற்பனை ஊற்றாம் கதையின் புதையல், திறம்பாட வந்த மறவன்; புதிய அறம்பாட வந்த அறிஞன் காட்டிற் படரும் சாதிப்படைக்கு மருந்து மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்;
பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/29
Appearance