பக்கம்:பாரதி லீலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கூத்தாடுகிருள் இருட்டு இருட்டு ; மையிருட்டு. அந்த மையிருட்டு நேரத்திலே மாடியிலே திறக்த வெளியிலே உட்கார்ந்திருக்கிருர் பாரதியார். அவருடன்கூட வேறு ஒருவரும் இருக்கிருர், திடீரென்று துள்ளிக்குகிக்கிரும் பாரதியார். அடே சங்கரா ! இந்த இருளேப் பாரடா ! இதுதான் பராசக்தி. இந்த இருளிலே மகாகாளி ஒரு பெண்மாதிரிக் காட்சி தருகிருள்பார். இந்த மையிருட்டுத்தான் மகாகாளி. அவளேப் பார்க் துப் பிரார்த்தனை செய்” என்று ஆவேசம் வந்தவர் போலக் கூறுகிரு.ர். தரையிலே மண்டியிட்டு உட்கார்ந்து ஆகா யத்தை அண்ணுந்து நோக்கிவிட்டார். அவ்வளவு தான் அவர் மெய்ம்மறந்து அந்த இருளிலே ஈடு பட்டார். அப்பொழுது ஒர் அழகான பாட்டுப் பிறந்தது. பின்னே ரிசாவினிலே-கரும் பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு கன்னி வடிவ மென்றே-களி கொண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில் அன்னை வடிவ மடா!-இவள் ஆதி பாாசக்தி தேவியடா -இவள் இன்னருள் வேண்டுமடா -பின்னர் யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/9&oldid=816603" இலிருந்து மீள்விக்கப்பட்டது