உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

3

தைத்துவிட்டால், குருதி பூம்புனல் வெள்ளமாகப் பாய்ந்தோடுவது உண்டு. அந்தப் பாங்கில் அவனது இதழ்களிலிருந்து சொற்கள் பாய்ந்தோட வெள்ளப் பாய்ச்சலாகப் பாய்ந்தோடத் தவித்தன. துடித்தன. ஆனால், உதிரக் கண்ணிர்தான் வெள்ளத்தின் சுழிப்போடு பீறிட்டது, வீரிட்டது. "பவளப்பெண்ணே!...” விழித்தான்.

கன்னி கழி யாப் பதுமை அசல் பதுமையாகவே உருக்கொண்டாள்.

"பவளம். நீ தருமத்துக்கும், சத்தியத்துக்கும் கட்டுப்பட்ட நல்ல பாம்பு! அந்த துப்பு எனக்குத் தெரவுசாய்த் தெரியும், அதொட்டிதான் உம்புட்டு மாடு பாய்ஞ்சி உசிருக்கு ஆபத்தாகிக் கெடந்த என்னை ஏறெடுத்தும் பார்க்காம இருந்த அலங்கோலத்தைக் கூட நான் பொருட்படுத்தலே! உங்கிட்ட கெலிச்சிருச்சு! ஆனா, உம்புட்டு செவலைக்கு அந்த முரடன் முத்தையனைத்தான் புடிச்சிருக்கும்போல; அதனாலேதான் அது அந்த ஆள்கிட்ட தோத்து போட்டு, ஒன்னை என்னொட கையிலே ஒப்படைச்சிடப் போவுது, பவளம். எந்தவிதியை நான் இது பரிந்தம் நம்பாமல் இருந்தேனோ அந்த விதியை நான் நம்பித் தீரவேண்டிய கட்டத்திலே நான் நின்னுக்கின்னு இருக்கேன் ஒன்னைக் கொண்டுக்கிடுறதுக்கு இந்தப் பாவிக்குப் பொசிப்பு இல்லை. முத்தையன் அண்ணாச்சி கொடுத்து வச்ச புள்ளியேதான் அட்டியே கெடையாது! நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்; இதான் எம்பூட்டுக் கடைசியான, அந்தரங்க சுத்தியான ஆசையாக்கும்!"

"மச்சானே!...”

《く ஊம்!”

"ஓங்களுக்கு ரொம்ப ரொம்பச் சுத்தமான மனசுங்க இந்தப் பெரிய மனசு நம்ப ஊர் நாட்டிலே யாருக்குமே வராதுங்க. சத்தியத்தை நாம வாழ வச்சாதான், சத்தியம் நம்பளையும் வாழ வைக்கும். அதே சத்தியத்தை நம்பியேதான், நீங்களும், நானும் உசிருக்கு உசிராய் பழகினோம். ஒரே உசிராகவும் பழகினோம். எல்லை தாண்டாமலும் பழகினோம். அந்த பரிசுத்தமான நேசத்தை நீங்களும் மறக்க ஏலாது. நானும் மறக்க வாய்க்காது. இந்த கதை காரணத்தை என்னோட புது மச்சான் காரவுகளும் தெரிஞ்சு வச்சிருக்காமல் இருக்க மாட்டாங்க. நம்மோட துல்லியமான அந்த நேசத்தை நாம கையெடுத்துக் கும்பிட்டு சத்தியம் எப்பவும் இந்தச் சென்மத்திலே மட்டுமில்லை. இனி ஏழேழு