உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

29


சுருட்டிக்கொண்டு எழுந்து, அந்த மனிதமிருகத்தின் மிருக மனிதனின் ஹறிப்பி முடியை எட்டிப் பிடித்து நெட்டித் தள்ளிவிட்டாள். 'ஒளங்கள் படத்திலே ஒரு கட்டத்திலே பூர்ணிமா கொடுங்களூர்ப் பகவதியாகச் சினந்து கொதித்தெழவில்லையா? அப்படித் தோன்றினாள் அவள்! சேட்டா என்று கூவி, அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவந்தாள், கீழே காலடியில் கும்பகர்ணனாக உறங்கிக்கிடந்த முரடனை எழுப்பினாள். அவனை ஒட்டி உரசியபடி அவனிடம் என்னவோ 'பறை'ந்தாள். அவன்தான் அவளுடைய சேட்டன். சேட்டன் என்றால் இங்கே கணவன்தான்; அண்ணன் இல்லை!

லட்சணமான அழகிக்கு அவலட்சணமாக வாய்ந்த முரட்டுக் கணவன். கண்கள் இரண்டும் ரத்தமாகச் சிவக்க எதிர்ப்பக்கம் பாய்ந்தான் ஆடு திருடிய கள்ளனாக விழித்துக்கொண்டே, அங்கிருந்து தப்பிப் பிழைக்க முனைந்த அந்த அநாகரிகப் போக்கரியை அவனது கழுத்தில் கையைக் கொடுத்து இழுத்து நிறுத்தினான்.

"ராஸ்கல்!" வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே, பாரதத்தின் பாரம்பரியப் பண்பாட்டின் நன்றியை மறந்த அந்தப் பாவியை அடித்து நொறுக்கக் கைகளை ஓங்கினான்!

9:

"நாயர்....

அவன் தடுத்தான்; மனிதத் தன்மையில் சிலிர்த்த மனிதாபிமானத்தோடு முரடனைத் தடுத்தான் அவன். "சேட்டன் என்னைச் சமிச்சு மாப்புத் தரணும்" என்று எச்சரித்தவனாக, அழகியின் முரட்டுக் கணவனிடமிருந்து அந்த அசிங்கமான மனித மிருகத்தை விடுவித்துத் தன் பக்கமாக இழுத்து, அந்த மிருக மனிதனின் நாகரீகமான, நயமான, சிவப்பான கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி மாற்றி மாற்றி அறை கொடுத்தான் அவன் பட்டணமாக இருந்திருந்தால், இப்படிப்பட்ட அநியாயத்திற்குத் தண்டனை கொடுப்பதில் அவனுடைய பெண்டு பிள்ளைகளும் தோள்கொடுத்திருப்பார்கள்...!

மறுகணம்...

அடிப்பட்ட ஈனப்புலி, இப்போது அவன் மீது பாய்ந்தது!

அவன் சிரிக்கிறான்! കൂഖങ്ങങ്ങ് தற்காத்துக்கொள்ள அவனுக்குத் தெரியும்!