இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33
பவனைத் திருத்தந்தை யென்னும்
- பிரானைப் பவானிதரு
மவனைக் கலியுக தெய்வத்தை
- வேளை அருட்கடலை
நவனைக் குளிர்மரு தாசல
- ஏந்தலை நம்பினவர்
தவம்மெய்த் தவம்மற்றை யோர்முனைந்
- தேசெய் தவமவமே. (79)
அவமாய வாழ்வை யகற்றி
- அடிமையென் றாட்படுத்தித்
தவமீ தெனவெனக் காட்டித்
- தருக்கைத் தவிர்த்தொழித்தான்
சிவமே தொழுங்குரு கொங்கில்
- மருதத் திருமலையிற்
பவமேற லின்றி யருள்செயும்
- வேற்கைப் பராபரனே. (80)
பரனார் கிரியும் அலைவாயும்
- தென்பழ னிப்பதியும்
வரனாரு மேரக முங்குன்றம்
- யாவும் வனமலேயும்
திரனார ஆறு படைவீ
- டெனக்கொளுங் தேசிகனைக்
79. பவன்-சிவபெருமான். பவானி-உமாதேவி. நவனை -புதுமையுடையவனே. ஏக்தலை-தலைவனை. அவம்-வீண்.
80. பவம் ஏறல் இன்றி-பாவம் ஓங்காமல்; பிறவியை அடையாதபடி எனலும் ஆம். 3