உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞர்-பாவேந்தர் பாரதிதாசன் பாடுகிருர் : திராவிட நாட்டுளிர் உங்கள் செயற்கெலாம் அறமே அடிப்படை ஆதல் வேண்டும் அறம் எனல் வள்ளுவர் அருளிய திருக்குறள் செல்லும் வழிக்குத் திருக்குறள் விளக்கு: மனமா சறுக்கும் இனிய மருந்து கசடறக் கற்க கற்றிலார் அறிஞர்பால் கேட்க: கேட்க: திராவிடம் மீட்க ஒளவையார் அருளிய ஆத்திச் சூடியில் ஒரு தொடர் தன்னை-ஒன்றுக்கான உரையை-எப்படி ஒருவர் இலேசாய் நினைவில் நிறுத்தி இனித்துரைப்பாரோ அப்படித் திருக்குறள் முனிசாமி அறிஞர் முப்பால் ஆயிரத்து முன்னுற்று முப்பது குறளையும் அவற்றிற்குக் கொடுத்த பொருளையும் நினைவில் நிறுத்தி இனிது விளக்கும் ஒர் ஆற்றல் உடையவர்; அவர் திருக்குறள் மலர் வழங்கும் நகைச்சுவை மறச்சுவை பிறகவை ஆர்ந்தசொல் அனைத்தும் பெரும்பயன் அளிப்பவை. அரிசிமா இட்டலி அளிப்பதாய்ச் சொல்லிப் பாசிப்பயற்றுமி படைப் பார் அல்லர்; அறிஞரின் பேச்சும் எழுத்தும் அருங்குறள் தேன் ஆற்றி னின்று செம்பில்மொண் டளிப்பவை குறட்பயன் கொள்ள நம்திருக் -- குறள்முனி சாமிசொல் கொள்வது போதுமே!