உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV


கோவையில் வாழும் ஞானியான பழனிச்சாமி அவர்களையும், உரையாற்றிய தோழர் பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரையும் இதோ இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

இதன் மூன்றாவது பதிப்பும், வானதி மூலம் விரைவில் வெளிவரப் போவது நிச்சயம். அப்போது எனது மூன்றாவது முன்னுரையில் அலிகளுக்கான அறக்கட்டளை செய்யும் சேவகம் பற்றியும், இந்த நாவல் அகில இந்திய அளவில் திரைப்படமாக வந்துள்ளதையும் நான் குறிப்பிடாமலேயே வாசகர்கள் அறிந்துகொள்ளும் சூழலும், அனைத்திற்கும் மேலாக பாவப்பட்ட அலித்தோழர்களின் வாழ்க்கையில் ஒரு ஆரோக்கியமான மாறுதலும் ஏற்படுமென்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை நனவாக வாசகத் தோழர்களாகிய நீங்கள் வாய்ச்சொல் அருள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

4-5-1997 தோழமையுடன், சென்னை - 41. சு. சமுத்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/17&oldid=1248944" இலிருந்து மீள்விக்கப்பட்டது