விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 9
1. நடந்ததெல்லாம் நன்மைக்கே
விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியமாக, நூறு நூல்களுக்கு மேல் எழுதியிருக்கின்றீர்களா? ஆச்சரியமா யிருக்கிறதே! என்று என்னிடம் வியந்து வினா எழுப்பியவர்கள் ஏராளம்.
ஏனென்றால், எனக்கே இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.அவர்களுக்குரிய கேள்விக்கு, ஒரு புன்சிரிப்புடன் பதிலை முடித்துக் கொள்வேன்.
ஆனாலும், என் உள்ளத்தில் இருந்து, திரிந்து, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிற கேள்வியோ எப்படி நூறு நூல்களுக்கு மேல் எழுத முடிந்தது? என்கின்ற கேள்வி
தான.
இந்த விந்தையான வினாவுக்கு விடையளிக்க வேண்டும் எனறால், நான் முப்பது.ஆண்டுகளுக்கு முன்னதாகச் சென்று, சிந்தித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்த முப்பது ஆண்டுகள், எவ்வளவு விரைவில், வந்து போய் முடிந்து விட்டிருக்கிறது?
இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்தது போல இருக்கிறது! அதற்குள்ளாகவா முப்பது ஆண்டுகள் முடிந்து போயின!
இந்த எழுத்துப் பணி எப்படி சாத்திய மாயிற்று?