40
வ.உ.சி.
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?–புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?–நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெரு நாடு
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றித் தரு நாடு–இது
கணக்கின்றித் தரு நாடு–நித்தநித்தம்
கணக்கின்றித் தரு நாடு–வாழ்க! (பாரத)
இனியொ ருவிதி செய்வோம்– அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்–வாழ்க! (பாரத)
‘எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்’
என்றுரைத் தான்கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும்–ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்–ஆம்ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்–வாழ்க! (பாரத)
எல்லாரும் ஒர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஒர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாகும் இந்நாட்டு மன்னர்–நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்–ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்–வாழ்க! (பாரத)
விடுதலை, வருகின்ற புதிய பாரதம், அதற்காக நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சபதம் அனைத்தும் அடங்கிய அவருடைய நெருங்கிய நண்பரான பாரதியின் பாடல்களைப் பலமுறை விரும்பிப் பாடச் சொல்விக் கேட்டுக்கொண்டே உயிர் பிரிந்தார். அப்போது அவருக்கு வயது 64. 🌕