பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:6 நாடகமேடை நினைவுகள் குளத்தை வெட்டினவன், அதன், சுகத்தை அறிந்திலன், வெயி லடிபட்டு வேட்கையுடன் வந்து, அக்குளத்திலிறங்கி, கைகால் களைச் சுத்தம் செய்து கொண்டு, அதன் தெள்ளிய நீரை உண் பவனே அதன் சுகத்தை உண்மையில் அறிகிருன்; அங்கனமே, ஒரு பெண்ணை ப் பெற்ற தந்தை அவள் மேன்மையையறியான், அவளது ரூ பலாவண்யதையும் குளுதிசயங்களையும் அனுபவிக் கும் அவளது புருஷனே, அவற்றை உண்மையில் அறிகிருன் ;. அங்கணமே, ஒரு கிரந்த கர்த்தா, தான் எழுதுவதின் மகிமையை அறிவதில்லை, அதை ஆராய்க் கறியும் அப்புஸ்தகத்தைவாசிப் பவனே, அதன் துட்பங்களை யெல்லாம் என்ருயறிகிருன், என் பதே மேற் சொன்னபடி நாடகங்களை எழுதும் நாங்கள் ஏதோ எங்கள் மனதிற்குத் தோன் றியபடி எழுதி விடுகிருேம். சிலசம பங்களில் நாங்கள் உபயோகிக்கும் பதங்களின் நுட்பங்களை காங்களே அறிகிறதில்லை. புத்திசாலிகளான நடர்கள் அவற்றை ாங்கத்தில் கடிக்கும் பொழுது தான், அவ்வார்த்தைகளில் அடங் கியிருக்கும் அனேக விஷயங்களை அறிகிருேம். இந்த "சரிதான் மாமா' என்னும் வார்த்கைகள் சொல்லப்படும் பொழுதெல்லாம், சபையிலுள்ளவர்சள் அன்று முதல் இன்று வரை காகோஷம் செய்யாத நாளில்லை. அப்படி அவர்கள் செய்யாவிட்டால், அது விஜயாள் வேடம் பூணும் ஆக்டருடைய குற்றம் என்பதற்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த விசேஷத்தை அவ்வார்த்தை களுக்கு உண்டாக்கியவர் எனது நண்பராகிய சி. ரங்கவடிவேலு வே. அவருக்குப்பின் இந்த விஜயாள் பாத்திரத்தை நடிக்கும் ஆக்டர்களெல்லாம் அவர் காட்டிய வழிபற்றியே இதை நடத்தி வருகின்றனர் என்பதற்கு ஐயமில்லை. இனி அன்றிரவு நடித்த வசந்தசேன பாத்திரத்தைப் பற் றிக்கொஞ்சம் எழுதுகிறேன். இக்காடகத்தில் நடிப்பதற்கு மிக வும் கஷ்டமான பாத்திரங்களில் இது ஒன்று. பத்மாவதி, விஜ யாள் முதலிய உத்தம குணமுடைய ஸ்திரீ வேஷங்களைப் ஆஇ பவர்கள், சபையே சர்களைச் சந்தோஷிக்கச் செய்வது சுலபம், இப்படிப்பட்ட ஸ்திரீ ரத்னங்கள் இன்னலுக்குட்படுகிருர்களே யென்று நாடகம பார்ப்பவர்களெல்லாம் அவர்கள் மீது பச்சாத் தா பங் கொள்கிருர்கள், வசந்தசேன முதலிய துஷ்டசாரித்ர முடைய ஸ்திரீகள் நாடகமேடையின் மீது தோன்றும் பொழு தொல்லாம், இத்துவிடையா என்று எல்லோரும் வெறுக்கி மூர்கள். ஆகவே இப்படிப்பட்ட வேஷங்களில் பெயரெடுப்பது கடினமே. அன்றியும் வசக்தசேனே நாடக பாத்தியத்தைத்தக்க படி நடிப்பது சுலபமல்ல. பத்மாவதியின் தோழியாயிருந்து, புருஷோத்தம மகாராஜாவைத்தன் மோகவலேக்குள் சிக்கச்