பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் செய்து, அதல்ை பத்மாவதியின் வைரியாகி, கேசரிவர்மன் என் லும் தன் சோசநாயகனுக்குதித்த வசந்தனே, மகாராஜாவின் மைக் தன் என்று எல்லோரும் நம்பும்படி ச் செய்து, எங்கு தன் சூது வெளியாகி விடுகிறதோ என்னும் பயமொரு பக்கமும் மகாராஜா எங்கு பத்மாவதியிடம் போய்ச் சேர்ந்துவிடுகிருரோ என்னும் பயம் இன்னெரு பக்கமும் உடையவளாய், சூழ்ச்சியின் மேல் சூழ்ச்சி செய்து கொண்டு, தன் கிலையைக் காப்பாற்றப் பார்க்கும் ஒரு ஸ்திரீ வேடம்பூண்டு தக்கபடி கடிப்பது, மிகவும் கடின மென்றே நான் கூறவேண்டும். இப்படிப்பட்ட, எ வரும் விரும் பாத வேடத்தை முதல் முதல் எங்கள் சபையில் அன்று பூண்ட வர், ம. கந்தசாமி முதலியார் என்பவர். இவர் அக்காலத்தில் என் தமயனுர் ஆறுமுக முதலியாருடன், சென்னைக் கவர்ன் மென்ட் கலாசாலையில் படித்தவர். அதன் மூலமாக எனக்கு இவரைத் தெரியவந்தது. எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் இவர் எங்கள் சபையில் மிகவும் சில நாடகங்களில்தான் கடித் தார். பிறகு எங்கள் சபையைவிட்டு நீங்கிவிட்டார். அதன் பிறகு சில நாடகக் கம்பெனிகளிற் சேர்ந்து என்னுடைய முக்கிய ஆான சிலநாடகங்களை அவர்களுக்குக் கற்பித்தார்; இங்கனமே சில பால நாடகக் கம்பெனிகளிலும் சிறுவர்களுக்கு அவைகளைக் கற்பித்தனர். தற்காலம் சிங்கப்பூர், மலேயாபிரதேசங்களுக்கும் போயிருந்து இப்பொழுது மதுரைக்கு வந்திருக்கிருர், இவர் வசந்தசேனேயாக ஒத்திகைகள் கடத்தும் பொழுது நேரிட்ட சிறு கைப்புக்கிடமான சமாசாரம் ஒன்று கூற விரும் புகிறேன். இவருக்கு சாதாரணமாகப் பேசும் பொழுது இடது கோளைச்சற்று அடிக்கடிது க்குகிற வழக்கம் உண்டு. இவ்வழக்கம் நாடகமாடும் பொழுதும் வந்தால் நலமாயிர தென்று, அதை அகற்றும்படி எவ்வளவு சொல்லிப் பார்த்தம், அவரால் அதை விடமுடியவில்லை அதன் மீது ஒரு யுக்தி செய்தேன். இவர் அனுமதியின் மீது இவர் ஒத்திகை செய்யும் பொழுதெல்லாம், இவருக்குப்பின் பக்கமாக ஒரு அங்கத்தினரை கிற்கச்செய்து இவர் தன்னை யு மறியாதபடி இடது தோளே உயர்த்தும் பொழு தெல்லாம், மெல்ல அத்தோள் மீது ஒரு குட்டு குட்டச்செய் தேன் பல ஒத்திகைகளில் இவ்வாறு செய்து வந்தபடியால், இவ் வழக்கத்தைப் பெரும்பாலும் விட்டனர் ஆயினும் முற்றிலும் விடாதபடியால் நாடக தினத்தில், மேற்சொன்ன படி செய்வதற் கில்லாமையால், பக்கப்படுதா (side wing) வண்டையில் ஒருவரை நிறுத்தி, எப்பொழுதாவது இடது தோள் உயர்த் தும்படி நேரிட் டால், ஊம்காரம் செய்து அதைத் தடுக்க ஏற்பாடு செய்தேன். இகை இவ்வளவு விவரமாக இங்கு நான் கூறியதற்கு ஒரு