இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
157
- சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு!
- திண்டாடச் செய்திடும் மை பூசுங் கண்ணு!
- செந்தாழைமேனி சிங்கார மூட்டும்!
- மண்மீது மாயா ஜாலங்கள் காட்டும்!
- கண்டோரை எல்லாம் கொண்டாடச் செய்யும்!
- கண்பார்வை அமுதெனும் தேன்மாரி பெய்யும்!
- கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும்!
- கொல்லாமல் கொல்லும் காயம் உண்டாக்கும்!
- வல்லாண்மைக் காரர் செல்வாக்கைப் போக்கும்!
- மன்னாதி மன்னரை மண் பொம்மையாக்கும்!
- ஆடாமல் ஆடும்! பாடாமல் பாடும்!
- அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும்!
- கூடாத செல்வம் எல்லாமே கூடும்!
- குறையுள்ள போதிலும் பின்னாலே ஒடும்!
பாக்தாத் திருடன்-1960
- இசை : கோவிந்தராஜலு நாயுடு
- பாடியவர்: P. சுசிலா