பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


எஜமான் பெற்ற செல்வமே!-என்
சின்ன எஜமானே! பசும்
பொன்னே என் கண்ணே
அழாதே! அழாதே!

தங்கமே உனக்குத் தந்தையில்லை!
தொண்டன் எனக்குத் தலைவன் இல்லை!
அன்புள்ள அன்னைக்குத் தராதே தொல்லை!
அன்னமே நீ கேளென் சொல்லை!
அழாதே! அழாதே

தாய் சொல்லைத் தட்டாதே தம்பி!
தந்தை பேரெடுக்கணும் என் தங்கக் கம்பி!
தீயவரோடு நீ சேராதே நம்பி! ராஜா!
சேவை செய்வேன் என்னை மறவாதே தம்பி!
அழாதே! அழாதே!

அல்லி பெற்ற பிள்ளை-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: G. ராமநாத அய்யர்


மருத-3