உரிப்பொருள் ஒன்றே துவலும் பாடல்கள் 433 தலைவன் தான் மடலேறத்துதுணிந்துள்ளமையைத் தெரிவிக்கின் றான் இப்பாடலில். அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின் உரவோர் உரவோ ராக மடவ மாக மடந்தை நாமே." (நீக்கி-துறந்து; துணை-துணைவி; உரவோர்-அறிவுடை யோர்: உரம-அறிவு: ஆக-ஆகுக: மடவர்-அறிவிலேம்.) தன்னைப் பிரிந்து செல்லுதல் அறிவுடைய தலைவர்க்கு அழகன்று என்பதாகத் தலைவி கூறுகின்றாள். பெண்ணென்னும் பொதுமை பற்றித் தன்பால் அருளேனும் துணைவி என்னும் சிறப்பு பற்றி அன்பேனும் உளராயின் நீங்காரென்பது குறிப்பு. காலே பரிதப் பினவே, கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே; அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே." (கால்-கால்கள்; பரி-நடை, தப்பின-ஒய்ந்தன; வாள்-ஒளி) உடன் போக்கில் தான் தேடிச் சென்ற தலைவன்-தலைவி இவர் களைத் தவிர எண்ணற்றவர்களைச் சந்தித்தாகக் கூறுகின்றாள் செவிலித்தாய். உடலினேன் அல்லேன் பொய்யா துரைமோ யாரவள் மகிழ்ந! தானே தேரொடு தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின் வளமனை வருதலும் வெளவி யோளே! (உடலுதல்-மாறுபடுதல்; உரைமோ-கூறுவாய்; உள்ளிநினைந்து; வெளவியோள்-தடுத்தவள்) தலைவி மகப்பயந்த பின்னர்த் தலைவன் மகவின்பால் பேரன் புடையவனாகத்தான் இருந்தான். ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு ஒரு நாள் சிறிது பிரிந்து மீண்டான். தலைவி அவன் பரத்தமை மேற்கொண்டனன் என்று கருதி அவனோடு புலந்து கூறுகின்றாள். 7. டிெ-20 8. ബ്ലൂ.-44 அ-28