50
அறவோர் மு. வ.
என்று தம்பிக்கு எழுதும் கடிதத்திலிருந்து தெளியலாம். தமிழன் தமிழ் மொழியை வல்ல மொழியாகவும், பல்லோர் போற்றும் மொழியாகவும் ஆக்கக் கடமைப்பட்டவன் என்பதை, "தமிழ் மொழி நல்ல மொழிதான். ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா?” (தம்பிக்கு, பக். 17) என்ற வினாவின்வழி உணர்த்துகின்றார். இது ஒவ்வொரு தமிழ் மகனின் உள்ளத்திலும், செவியிலும் ஒலிக்கப்பட வேண்டிய வினாவாகும். தமிழ் நாட்டின் மீது தமிழனுக்குக் காதல் இருக்க வேண்டும். தமிழ் நாட்டுக்காகத் தமிழன் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை,
எனத் தம்பிக்கு எழுதும் மடலில் குறிக்கின்றார்.
தனிமனிதனுக்கு
உலகத்திற்கு - சமுதாயத்திற்கு - இல்வாழ்க்கை மாந்தர்க்கு - ஆண்களுக்கு - பெண்களுக்கு - தமிழர்க்கு என்று பல்வேறு பிரிவினரும் ஏற்றிப்போற்றும் கருத்துகளை - எண்ணங்களைத் தம் இலக்கிய வடிவங்களில் உணர்த்திய டாக்டர் மு. வ. அவர்கள் தனிமனிதர் ஒவ்வொருவரும் போற்ற வேண்டியவற்றையும் குறித்துச் சென்றுள்ளார். இவை ஓர் இனத்தவர்க்கோ, ஒரு நாட்ட