பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காதலும் மணமும்


I

ஊர் அடங்கிவிட்டது,

என் கணவர் சுகமாய்த் தூங்குகிறார்,

ஆனால், என் துன்பமோ

என் கண்வழிப் பெருகும்.

II

என் அழகன் ஜேமி என்னைக் காதலித்தான்,

என்னை மணந்து கொள்ள விரும்பினான்,

ஆனால், அவன் கையிலோ காசில்லை,

மாலுமி வேலை பார்க்கச் சென்றான் -

எல்லாம் என் பொருட்டே !

III

அவன் போய் இரண்டு வார மாகவில்லை -

என் தந்தை கை முறிந்து விட்டது,

எங்கள் பசுவைக் காணோம்,

என் தாயார் நோயாகி விட்டாள் !

அப்பொழுதுதான் ராபின் கிரே

என்னை மணம் பேசி வந்தார்.

ஆனால் என் ஜேமியோ - கப்பலிலே !


23