பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

125


தொய்வு ஏற்பட்டிருக்க வேண்டும். அதுவும் தன்னம்பிக்கை குறைந்த அளவிலோ, அளவுக்கு மீறிய நம்பிக்கை தங்கள் அறிவை மழுக்கிய அந்நேரத்திலோதான் அச்சரிவு நிகழ்ந்திருக்க வேண்டும். அத்தகைய சரிவு – ஒர் இடைப்பள்ளம் – தமிழினத்தின் வரலாற்றில் நேர்ந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்நிலை ஏற்பட்டுக் கடந்த மூவாயிரமாண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளதே அதுதான் வேடிக்கையினும் வேடிக்கை இனி, அதனினும் வியப்பான – வேடிக்கை எதுவென்றால், மிகவும் பெரும்பான்மைமிக்க அவ்வினம் – அஃதாவது – நம் இனம் – தொடர்ந்து தாழ்ந்த நிலையிலேயே சாய்க்கடைப் புழுவென வீழ்ந்து கிடப்பதற்கு, அந்த மூன்று அல்லது நான்கு விழுக்காட்டுக் கூட்டத்தையே கரணியங் காட்டிப் பேசி வருகின்றோமே அது! அதை நினைக்கையில்தான் வெட்கத்தை விட்டுச் சிரித்துப் புழுங்க வேண்டியிருக்கின்றது!

தமிழர்களாயிருக்கும் நம்மை முன்னேற்றிவிட வந்த நம் தலைவர்களும் நம் எதிரிகளைச் சாடிய அளவிற்கு, நம்மையே அரித்துக் கொண்டிருக்கும் நம் இனப் பற்றின்மையையோ நம்மின் இனங்கொல்லித் தன்மையினையோ, நம்மையே நாம் கூறுபோட்டுக் கொண்டிருக்கும் அடி மூடத்தனத்தையோ குல மத வெறியாட்டங்களையோ அத்துணை வலிந்த குரலில் சாடியதில்லை. கம்பனை நாம் அவன் நம்மவரைத் தாழ்த்தும் வகையில் இராமாயணத்தைப் பாடியதற்காக, அவன் இருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகுமளவிற்குத் திட்டித் தீர்த்திருக்கின்றோம். ஆனால் அதற்குப்பின் அத்தகையதொரு நிலை ஏற்படாதிருக்குமாறு நம் இனப்போக்கில் சில தெளிவுகளை உண்டாக்கிக் கொள்ளவில்லை. கம்பவிராமாயணத்தைப் போல் அத்துணை இனக் கேடான ஒரு பாவியம் கம்பனுக்குப்பின் பாடப் பெறவில்லை யாயினும், அப்படி ஒரு பாவியம் எழுந்து செய்ய வேண்டிய வேலையைப் பன்னூறு மடங்காக அவன் இராமாயணமே செய்து கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. திறமையில் கம்பனைப் போலப் பாட எவரும் முன் வரவில்லையே தவிர, நம் இனங்கொல்லும் தற்கொலை வேலையில் கம்பனையே மிகச் சிறியவனாக்கிய தமிழர்கள் தோன்றித்தான் உள்ளனர். இந்த நிலை ஏன் என்று நமக்கு வழிகாட்டிகளாக அமைந்தவர்கள் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இதற்குப் பார்ப்பானைக் குறைகூறிப் பயனில்லை.

அடுத்து, பார்ப்பானே உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் குலக்கோட்பாடுகளுக்கும் கரணியனல்லன்.