பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


செயற்பாட்டையும் போற்றியிருக்கும். இப்படியாக இரண்டு பெருங் கூட்டங்கள் காதில் பூ வைத்துக்கொண்டு தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கும். இந்தத் துண்டுத்தாள் (காகித) எரிப்புப் போராட்டத்தில் (நோக்கத்தையே கொச்சைப்படுத்துகிறார்.) இப்படித் தமிழக மக்கள் ஏமாறவில்லை என்பதே ஒரு நல்ல அறிகுறி” - என்றெழுதுகிறார் சோ.

எதற்கு நல்ல அறிகுறி. இந்திரா பேராயம் வந்து தமிழகத்தில் புகுவதற்கு எதிரிகள் இரண்டுபட்டிருக்கிறார்கள் என்பது இக் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது, கட்டியங்கறித் தில்லிக்குப் பாதக் கம்பளம் விரிக்கிறார், சோ. இவர்தாம் அன்று இந்திராவுக்கு எதிராக எழுதிக்கொண்டிருந்த கோமாளி. இவர்தாம் கனவு காண்கிறார், கற்பனை பண்ணி உடல் பூரிக்கிறார். இவர் கண்டு மகிழும் கனவைப் பாருங்களேன்!

"இந்த இரு கழகங்களை விட்டு அரசியல் நடத்தத் தாங்கள் அணியமாக(தயாராக) இருப்பதாகத் தேசியக் கட்சிகள். மக்களிடையே மெய்ப்பித்தால் (நிரூபித்தால்), ஆதரவு கிடைக்காமல் போகாது. மாற்றத்தை வரவேற்கத் தமிழக மக்கள் அணியமாக(தயாராக)த் தொடங்கிவிட்டார்கள்ள என்பதற்கு அறிகுறிகள் தோன்றுகின்றன” என்கிறார் இக் கட்டியங்காரக் கோமாளி !

தமிழக மக்கள் மாற்றத்துக்கு அணியமாக ஆகிவிட்டார்களாம்!! இந்த இரட்டைக் கொம்புப் பார்ப்பனர் சோ சொல்கிறார். இவருக்கு மட்டுமே இரட்டைக் கொம்பு இல்லை. எல்லாப் பார்ப்பனருக்குமே இரட்டைக் கொம்புகள் உண்டு. தமிழினம் தனக்குள் பிளவுபட்டு ஒன்றையொன்று பகைத்துக்கொண்டு கிடக்கும் வரை தங்களுக் கிருக்கும் இரட்டைக் கொம்புகளையும் பயன்படுத்தி இரு பிரிவினரையுமே அழித்தொழிக்கத்தான் பார்ப்பார்கள் என்பதில் யாருக்குமே ஐயம் வேண்டியதில்லை. இவ்வுண்மையை வேறு யாரையும்விட, கலைஞர் கருணாநிதியும், முதலமைச்சர் ம.கோ. இராமச்சந்திரனுமே எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணுவார்களா? இதைக் கால முடிவுக்கே விட்டு விடுவோம்!

::ஞாலங் கருதினுங் கைகூடும் காலங்

கருதி இடத்தாற் செயின்
- தமிழ்நிலம் இதழ் எண். 81