தமிழகத்தை நிலையாக வடநாட்டுக்கு அடிமைப்படுத்தத் துடிக்கிறார்கள்
“நடுவணரசு எல்லாவற்றையும் கவனமாகக் கவனித்துக் கொண்டு வருகிறது. இளைய தலைமையமைச்சர் இராசீவ் காந்தியின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது” - என்று சட்டப் பேரவையில் இந்திரா பேராய உறுப்பினர் ஒருவர் தமிழக எதிர்க்கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்திப் பேசியிருக்கிறார். அவரும் ஒரு தமிழர் என்று பிறவியில் உலவுபவர்.
இராசீவ் காந்தி ஏதோ பூதம் என்று நினைத்துக்கொண்டு அவர் பேசிய அச்சுறுத்தல் பேச்சு அவரின் அறியாமையை மட்டுமன்று, கீழடிமைத்தனத்தையும் நன்கு புலப்படுத்துகின்றது. சட்டமன்ற மரபுக்கே மாறான, கேடான இவ்வகைப் பேச்சுகளை அவைத்தலைவர் நல்லவேளை - அவைக்குறிப்பிலிருந்து நீக்கச் சொல்லியுள்ளது பாராட்டப்படக் கூடியது.
மேலே குறிப்பிடப்பெற்ற அரம்பத்தனமான பேச்சைப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லர், இங்குள்ள இந்திரா பேராயக் கட்சித் தலைவர்கள் எனப்படுவோர் பலரும் இம் மாதிரிப் பேச்சுகளை அண்மைக் காலங்களில் பேசி வருவது அனைவர்க்கும்