பாவலரேறு பெருஞ்சித்திரனார்
269
மதமற்றவர்கள் இறைமை, மதம் என்கிற உணர்வே இல்லை என்பவர்கள்), மதச்சார்பற்றவர்கள் (இறைமை உணர்வுள்ளவர்கள்; ஆனால் மதம் தேவையில்லை என்பவர்கள்). தமிழ்மதம் சார்ந்த நிலை (இறைமை உணர்வுள்ளவர்கள். பண்டைத் தமிழர் மதங்களாகிய சிவனியம், மாலியம் - இவற்றை விரும்புபவர்கள்; ஆனால் ஆரியத் தொடர்பை விரும்பாதவர்கள்) - எனப் பெரும்பிரிவுகளாக அமையலாம்.
எவ்வாறேனும் இந்துமதத்தினின்று தமிழர்கள் உடனே வெளியேறியாக வேண்டும். இது தொடர்பாக உலகத் தமிழின முன்னேற்றக் கழகமும் அதன் தொடர்புடைய தோழமைக் கட்சிகளும் பங்கெடுத்துக்கொள்ளும் தமிழகம் அளாவிய ஒரு பெரும் மாநாடு விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது என்பதை மட்டும் இப்பொழுதைக்கு இங்குக கூறிக்கொள்ள விரும்புகிறோம். அன்பர்கள் இது தொடர்பான வரவேற்பு எதிர்ப்பு எனும் இருமைக் கருத்துகளையும் நமக்குத் தெரிவிப்பார்களாக.