பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

125



ஒவ்வொரு உயிரினமும் அந்தந்த அளவாக அமைந்திருப்பது, பரம்பரைக் குணத்தின் பாங்கல்லவா! அதை புரிந்து கொண்டுதான், உடற்கல்விப் பாடத் திட்டங்களை உருவாக்கிடவேண்டும்.

7. நேரத்தில் வளர்ந்து காலத்தில் முடிவடைந்து கொள்கிறது உடலில் ஏற்படும் வளர்ச்சி, குழந்தைகள் வளருகின்ற வேகம், இளைஞர்கள் ஆனதும் குறைந்து போகிறது. அப்படி குழந்தைகள் வளரும் வேகத்தில், மனிதர்கள் வளர்ந்து கொண்டே போனால் ஒவ்வொருவரும் பனைமரம் போலவும், பூதாகரமாகவும் அல்லவா வளர்ந்திருப்பார்கள். ஆகவே, இயற்கையானது வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது, சமநிலைப்படுத்துகிறது.
8. வயதுக்கேற்ற வளர்ச்சி, வளர்ச்சிக்கேற்ற செயல் திறன், செயல்களுக்கேற்ற உடலமைப்பு, சூழ்நிலைக்கேற்றப் பயிற்சிகள் இப்படியெல்லாம் ஆய்ந்து தருகிற பயிற்சிகளே, உடலுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கின்றன.
9. வளர்ச்சியில் நாம் ஒன்றைக் குறிப்பாக உணர வேண்டும். செய்கின்ற காரியங்களில், திறமைகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக, ஒழுங்காக வருவதில்லை. வளர்வதில்லை. மாறி மாறி வரும். அப்படி வந்தாலும், திறமைகள் வளர்வதில் குறைவுபடுவதில்லை. உதாரணத்திற்கு ஒன்று குழந்தைகள் எழுதிப்பழகும்போது, முதலில் வட்டம் போட வருகிறது. சதுரம் போடத் தெரியவில்லை. குழந்தைகளுக்கு முதலில் நிற்க வர வேண்டும். ஆனால் முதலில் உட்காரத்தான் தெரிகிறது. அதனால், திறமைகள் வளர்ச்சியில், வருவதை முதலில் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.