பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

97




மதிப்பும் மனிதனும்

அவன் பெறுகிற மதிப்புகள், சிறப்புகள் எல்லாம் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன. அதே நேரத்தில், அவைகள் நிலையான தன்மை பெற்றும் நீடித்து தொடர்கின்றன.

ஏனென்றால், மனிதனுக்குத் தன் விருப்பம் போல் செயல்படும் ஆற்றல் இயற்கையாகவே உள்ளன. அந்த ‘விருப்பம்’ (Will) எனும் மன உறுதியுள்ள ஆற்றலால், இந்த உலகத்தில் உலவுகின்ற நன்மைக்கும் தீமைக்கும்; அழகுக்கும் அலங்கோலத்திற்கும்; சுதந்திரத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் புரிந்து கொண்டு அவைகளுக்கும் தனக்கும் உள்ள உறவினையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுகிறான்.

காரணமும் உள்ளுணர்வும்

இப்படியெல்லாம் நடந்து கொள்ளத் துண்டுவது அவனுள்ளே அமிழ்ந்து கிடக்கும் உள்ளுணர்வும், காரணம் கேட்டு அறியத் துடிக்கும் ஆவலும் தான்.

அப்படி செயல்படத்துண்டும் மனித மனம், எல்லா நினைவுகளுக்கும் அடிப்படையாக, படைக்கும்பேராற்றல் மிக்கதாக மனிதனுக்கு உதவி, உலகை நன்கு அறிய உதவுகின்றது.

இந்த மனித மனம், விஞ்ஞானபூர்வமான ஆய்வு முறைகளையும் அறிந்து பயன்படுவதில் நம்பிக்கைக் கொண்டு விளங்குகிறது.

இந்தக் கொள்கைத் தத்துவத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமை பெற்றவர் பிளேட்டோ எனும் கிரேக்கத் தத்துவஞானி ஆவார்.