பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

இவ்வாறு எல்லா வழிகளிலும் கற்கிறபோது, ஏற்படுகிற இன்பம், எழுத்தால் வருணிக்க முடியாத ஒன்றாகும்.

ஆனாலும், கற்றலினால் உண்டாகின்ற வளர்ச்சியும் எழுச்சியும், கற்பவர்க்கு எப்படி அமைகிறது என்பதையும் நாம் காண்போம்.

1. கற்பது நல்ல வளர்ச்சியை நல்குகிறது. அதாவது உடலாலும், உள்ளத்தாலும், ஏற்படுகிற வளர்ச்சியே அது.

2. புதிது புதிதாகத் தோன்றும் சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப நெகிழ்ந்தும், வளைந்தும், ஒன்றியும், ஒதுங்கியும், மாற்றியும் மாறியும் கொள்கிற மனப்பக்குவத்தை கற்றல் கொடுக்கிறது.

3. கற்றல், நல்ல நிர்வாகத் திறனை வளர்த்து விடுகிறது. அவ்வப்போது ஏற்படுகிற புதிய அனுபவம், பழைய அனுபவம் இவை தரும் வளமே அது.

4. கற்றல் நல்ல இலட்சியத்தையும், நல்வாழ்வு நோக்கத்தையும் அளிக்கிறது.

5. கற்றல் அறிவுக் கூர்மையை வளர்த்து விடுகிறது.

6. கற்றல் ஒருவரின் சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் துணிவையும், நம்பிக்கையையும் - அளிக்கிறது.

7. கற்றல் நல்ல முன்னுணரும் அறிவை விளைவித்துத் தருகிறது.

ஆகவே, கற்பதினால், கற்பவருக்கு நல்ல வளர்ச்சியும், ஏற்றம் தரும் எழுச்சியும் எடுப்பாகக் கிடைக்கிறது. என்கிற உண்மை நிலை எல்லாம், எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல், தெளிவாகவே தெரிகிறது.