இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
<poem>மல்லர் உடலுரம் வேண்டும்-உயர்
மார்பும் அகன்றிடல் வேண்டும்-மிக நல்லவர் என்றுல கேத்த-நிதம் நன்மைகள் நாடிடல் வேண்டும்.
சற்குணங் கள்பல பெற்றார்-வித்யா
சாகரர் என்னும்அக் கற்றார்-அவர் பொற்குணம் யாவும் பெறுவோம்-புவி போற்றும் புகழும் உறுவோம்.
தோள்கள் பருத்திடல் வேண்டும்-உயர்
தூய்மைக் குணங்களும் வேண்டும்-பல நாள்கள் கழித்திடல் நன்றோ?-நந்தம் நாடு செழித்திடல் என்றோ?
அல்லும் பகலும் உழைத்தே-பச்சை
யப்பனைப் போலத் தழைத்தே-பல நல்லறம் நாடிப் புரிவோம்-இந்த நன்மதி யாவும் மறவோம்.<\poem>
7