பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269


நன்றி காட்டியவர்கள்

நாயுடு அதிகச் சம்பளம் தருவதாக எவ்வளவோ ஆசை காட்டியும் அதற்குக் கட்டுப்படாமல் எங்களோடு வந்தவர்கள் சிலர். அவர்களில் முதல்வர் என். எஸ். கிருஷ்ணன். இன்னும் சீன் மேஸ்திரி பத்மனாபபிள்ளை, கொல்லம் பாலகிருஷ்ணன், கே. கோவிந்தசாமி, டி. என். சிவதானு, என். எஸ். பால கிருஷ்ணன், என். எஸ். வேலப்பன், பிரண்டு ராமசாமி ஆகியோர், எல்லோருமாகச் சாமான்களை வெளியே கொண்டு சேர்த்தனார். விடைபெற்றுக் கொண்டு வெளியேறினோம். அப்போது நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை நகரசபைத் தியேட்டரில் (தேவர் மன்றம்) நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். சொந்தக் கம்பெனி ஆரம்பித்த புதிதாகையால் எந்நேரமும் ஒத்திகை சுறு சுறுப்பாக நடைபெற்று வந்தது. விலகியவர்கள் எல்லோரும் நவாப்பின் விருந்தினராக, ஒரு நாள் அவர்கள் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம். எல்லோரும் உட்கார்ந்து புகைப் படம் எடுத்துக் கொண்டோம். மறுநாள் புறப்பட்டு நாகர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.