பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

383


நடித்ததை நான் கண்ணாற்று மிக மகிழ்ந்தேன். நடிப்பு முறை களில் எல்லா அம்சங்களும் போற்றத் தக்கனவாக இருந்தன. இவ்வாறு வேறுஅநேக கதைகளையும் இவர்கள் நடித்து மகாஜனங் களே ஆனந்திப்பித்து வருவதாக அறிகிறேன். நாடகப் பாத்திரங் களாயுள்ளவர்கள் இனிய செந்தமிழ் நடையிலும் யாவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் விதத்திலும் பேச்சு நடத்துவதைக் கேட்டு உவகை கொண்டேன். காட்சிப் படங்கள் மனதைக் கவர்ந்து கொள்ளும் சிறப்புடையன. சாகித்யமும் சங்கீத மெட்டுக்களும் மெச்சத்தக்கன. நாடகம் நடத்துகிற ஒழுங்கும் நடவடிக்கைகளும் டி. கே. எஸ். சகோதரர்களினுடையநுண்ணறி வையும் நல்லொழுக்கத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குவன. அவர்களுடைய இந்த வியக்கத் தக்க முயற்சி இன்னும் மேம்பாடுற்று இனிய தமிழ் வளர்ச்சியையும் தமிழ் இன்னிசை வளர்ச்சியையும் உண்டாக்கித் தழுலகிற்குப் பேருதவி யளிக்குமென்று நான் உறுதியாய் நம்புகிறேன்.

மதுரை தமிழ் வித்வான் திரு. நா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள்

சிவபெருமான் கூடலின்கண் செய்ததிரு
விளையாடல் செப்புங்காலை
எவரறிவார் பரஞ்சோதி எழுதிவைத்த
ஏட்டிலிவை இருப்பதன்றி?
பவம்விலகிப் புனிதமுற மதுரையூரஸ்ரீ
பாலசண்மு கானந்தப்பேர்
சவைகடித்துக் காட்டினதால் சங்கீத
வமுதினையும் சார்ந்துண்டோமே!

வல்லானென் றிசைப்போர்க்கு வந்தவனை
யோடவிட்ட மகிமை கண்டோம்
கல்லானை உண்பதற்குக் கரும்பளித்த
பெருங்காட்சி கண்டோம் ஆங்கே
இல்லாரை உண்டாக்கி இருக்தாரைக்
கணமறைத்த இயல்பு கண்டோம்
எல்லாஞ்செய் திடற்குரிய ஈஸ்வரனார்
விளையாடல் என்னே! என்னே!!