பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384


பேர்சிறக்த டி. கே. எஸ். பிரதரிவர்
நடிப்புமுறை பேணுங்கீதம்
சீர் சிறந்த செந்தமிழ்ப் செவிக்கினிய
வசனநடை தேகுே பாலோ!
ஓர் சிறந்த தெள்ளமுதோ உண்ண உண்ணத்
திகட்டாமல் உளமுற்றுாறும்
பார் சிறந்த முப்பழத்தின் பாகமுதோ
அத்தனையும் பகரலாமே!

தனிமதுரை ஸ்ரீபால சண்முகா
னந்தசபை தரணிமீது
கனிமதுர கவரசநற் கண்காட்சி
சங்கீதம் கலந்து தோன்ற
மனிதர்குலம் மகிழ்வடைய மாபெரிய
சரிதமெலாம் வகுத்துமேலாய்
இனி திருந்து நடத்திடுக! இருகிலமிங்
கிருக்கும்வரை இசைந்துமாதோ !

மதுரை கே. இலட்சுமி பாரதி. எம். எல். ஏ.

இச்சபையார் நடத்தி வருகிற சிவலீலா நாடகத்தை மும் முறை பார்த்தேன். இன்னும் எத்தனைமுறை பார்த்தால் திருப்தியடைவேன் என்று சொல்வதற்கில்லை. தெவிட்டாத தெய்வ அமிர்தம் என்றே சுருங்கக் கூறுவேன். தமிழை அழ்மிதுக்கு ஒப்பிட்டது இதனால்தான் போலும்! தெய்வ பக்தியின் மேன்மைகளைப் பரப்புவது இந்த நாடகம், தமிழ்மொழியைத் தழைத்து ஓங்கச் செய்வது இந்த நாடகம் பார்க்குந் தோறும் உள்ளத்தை உயர்த்துகிறது. கண்ணைக்கவரும் காட்சிகள்; உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் பேச்சு! செவிக்கினிய பாட்டு!! மனதை இழுக்கும் சிவ பெருமான் திருநடனம். பார்த்து அனுபவிக்க வேண்டிய இந்த நாடகத்தை எழுத்தில் புகழ்வது எங்ஙனம் இயலும்? மக்களுக்குப் பயன்படும் இத்தகைய நாடகங்களை நடத்திப் பேரும் புகழோடும் சீரும் சிறப்போடும் இச்சபையார் வாழ்ந்து ஓங்கி வளம்பெற வளரவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.