385
உலகுயிர் உய்ய ஒளிர்சிவம் நடித்த
உயர்சிவ லீலையை இன்றித்
தலமுயர் பால சண்முகா னந்த
சபையினார் சதுருடன் நடிக்கும்
நிலையெதிர் கண்டார் நிறைநலம் கண்டார்
நித்தலும் சிவனருள் நினைந்து
நலமுயர் பக்தி நிலைமிகப் பெற்று
நானிலம் இன்புற வாழ்வார்!
தீர்க்கமுடன் நூற்றெட்டுத் தினங்களிதே சிவலிலைத்
திருவி ழாவைப்
பார்க்கவரும் பேர்களித்தோ ராயிரத்தெட் டரன்பதியைப்
பணிந்த பாக்யம்
ஊக்கமுறக் கிடைத்ததென்றே கூறுகின்றார் நந்நெறியி
லுயர்ந்தோ ரெல்லாம்
ஆக்கமிகும் ஸ்ரீபால சண்முகா னந்தசபைக்
கரும்பே றீதே!
இயலிசைக்குப் பிறகுவைத்த நாடகத்தை முதன்மைபெற
எடுத்துக் காட்டிச்
செயலிசைக்கும் நவரஸங்க ளுடன் பலமெய்க் காட்சிகளும்
சிறப்பாய்த் தோன்றக்
கயலிசைக்கண் ணம்பிகையாள் மதுரைநகர்ச் சனசமுகம்
களிப்பே கூர
மயலிசைக்கும் ஸ்ரீபால சன்முகா னந்தசபா
வாழ்க மன்னே!
சங்கரன் முத்துசாமி சண்முகனும் பகவதியாம்
சகோத ரர்தாம்
பொங்கரவம் புனைந்தபிரான் திருவருளாற் பலாகலமும்
பொருந்தி வாழ்க!