பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கோடை வெப்பத்தில் உதிர்ந்த மலரென
தலை சுழலச் சுழல தரையில் நழுவினாள்
மரக்கிலையில் இருந்த மாருதி குமுறினான்
உருகி உருகி உருக் குலைந்தவளுக்கு
ஆறுதல் கூற முன் அறிமுகம் இல்லை.
ஆயினும் அவளைத் தேற்றுவதற்கு ஒரேவழி.
ராமநாமம் என்பது தெளிந்தான்
ஒன்பது இலக்கணமும் உணர்ந்த அனுமன்
கல்லா மழலை கனிந்து கனிந்து
காற்றில் கரைந்து வந்தோ?
ராம, ராம, ராமாவோ என்ற
மதுரமொழி அவள் செவிகுளிரச் சேர்ந்தது

அனுமன்
கோசலைச் செல்வன் கோதண்ட ராமன்
தாசரதி என்பார் தசரத ராமன்
ஜனகன் மருகன் ஜானகிராமன்
கவுசிக வனத்தில் கல்லாகி விட்டவளை
பெண்ணாக்கித் தந்த பிரபு ராமன்
பரசுராமன் தனுசை வளைத்து
தவத்தை பறித்த தனுர் வீர ராமன்
தந்தை சொல் மீக்க மந்திரமில்லை என்று
மணிமுடியை புறக்கணித்து மரவுரி தரித்து
கானகம் சென்ற காகுத்தன் ராமன்
ஏழைப்படகோட்டி குகனை இனிய
தம்பியரில் ஒருவனாக தரித்த ராமன்
பரத நம்பிக்கு பாது காவலாக

பாதுகையளித்த பட்டாபிரான்