பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் வழிபாட்டு வரலாறு


1. நூல் முதல்

நூல் முதல் என்னும் இந்தப் பகுதி, இந்த நூலின் எழுச்சிக்கு உரிய காரணத்தை விளக்கும் பகுதியாகும்.

சைவ சிந்தாந்தப் பற்று

இளமையில் யான் முறுகிய கடவுள் பற்று உடையவனாக இருந்தேன் : திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஞானியார் மடத்தில் கல்வி பயின்றேன்; புலவர் பட்டம் பெற்றதும், மயிலம் அருள்மிகு பாலய சுவாமிகள் கல்லூரியில் பத்தொன்பதாம் வயதுத் தொடக்கத்திலேயே பிரிவுரையாளனாக அமர்ந்து பணியாற்றினேன் ; இந்த இரண்டு மடங்களின் தொடர்பினால் சைவப்பற்று-சைவ சித்தாந்தப் பற்று உடையவனாக இருந்தேன் ; சைவ சித்தாந்தக் கொள்கையைப் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றிப் பரப்பும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தேன்.

பொய்ம்மையும் போலித் தன்மையும்

நாள் ஆக ஆக, அகவை (வயது) ஏற ஏற யான் ஒரு வகைச் சிந்தனையில் ஈடுபடலானேன். இதற்குக் கார